வேலூர்

அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர்

DIN

ஆற்காட்டை அடுத்த தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கிராம கல்விக் குழுத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் என்.சாரதி, பி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை வேண்டாமணி வரவேற்றார். தொழிலதிபர் ஆர்.எஸ் சேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். 
பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சார்பில் பள்ளிக்கு பீரோ, தொலைக்காட்சிப் பெட்டி, பாத்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள், கல்வி உபகரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.  இதில், கல்விக் குழு உறுப்பினர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வேலூரில்...
வேலூர், சத்துவாச்சாரி வ.உ.சி.நகரிலுள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்விசீர் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியர் சவிதாபாய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், சமூக ஆர்வலர் ஜானகிராமன், சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்மணி, முன்னாள் நகராட்சி மண்டலத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பள்ளிக்குத் தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT