வேலூர்

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

DIN


வாணியம்பாடி நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. 
வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலை அருகே நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு மலை போல் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதன்கிழமை இரவு குப்பைக் கிடங்கில் திடீர் தீப் பிடித்து எரிந்தது.
இதையடுத்து, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் காற்று பலமாக வீசியதால் குப்பைக் கிடங்கு முழுவதும் தீ பரவியது. இதனால் இரவு 12 மணி வரை போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT