வேலூர்

பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

DIN


சென்னை-அரக்கோணம் பிரிவில், வியாசர்பாடி ஜீவா யார்டில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ஜூலை 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு ஜூலை 13- ஆம்தேதி  முதல் 17-ஆம் தேதி  வரை இயக்கப்படும்  மின்சார ரயில் சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதன்காரணமாக, இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். 
கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு ஜூலை 13-ஆம் தேதி  முதல் 18-ஆம் தேதி வரை இயக்க வேண்டிய மின்சார ரயில் கொருக்குபேட்டை-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றி விடப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT