வேலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN


ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ஆண்டியப்பனூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (23). வெல்டர். இவர், சனிக்கிழமை என்ஜிஓ நகரைச் சேர்ந்த கோவிந்தராஜின் வீட்டில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சீனிவாசன் பலத்த காயமடைந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT