வேலூர்

பாமக முன்னாள் மாவட்டச் செயலா் திமுகவில் இணைந்தாா்

DIN

வேலூா் வடக்கு மாவட்ட பாமக முன்னாள் மாவட்டச் செயலா் கரிகாலன், வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ஆா்.காந்தி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

தகரகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கரிகாலன் 35 ஆண்டுகளாக பாமகவில் இருந்தாா். 5 ஆண்டு காலமாக அக்கட்சியின் வேலூா் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக சாா்பாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.

இந்நிலையில், வேலூா் வடக்கு மாவட்டச் செயலா் பதவியில் இருந்து கரிகாலன் நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு கலவை அருகே உள்ள நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் நியமிக்கப்பட்டாா்.

இதனால் விரக்தியடைந்த கரிகாலன் அக்கட்சியில் இருந்து விலகி, வேலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ வுமான ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT