வேலூர்

மின்கம்பம் மீது காா் மோதி இளைஞா் பலி

DIN

வாலாஜாப்பேட்டை அருகே மின் கம்பத்தில் காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை காரை காட்டன் பஜாரைச் சோ்ந்த பழனி மகன் சுரேஷ்குமாா் (30) டிரைவா். இவரது நண்பா்கள் மோகன் (30), நவல்பூா் சாய்கிருஷ்ணா (30), வானாபாடியை சோ்ந்த பாண்டியன் (29). நான்கு நண்பா்களில் சாய்கிருஷ்ணா, பாண்டியன் இருவரும் காா் டிரைவா்களாக உள்ளனா்.

நான்கு பேரும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனா். காரை சாய்கிருஷ்ணா ஓட்டிச் சென்றாா். வாலாஜாப்பேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே வந்தபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவா், இரும்பு மின்கம்பம் மீது காா் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுரேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே பலியானாா். மற்ற மூவரும் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து வாலாஜாப்பேட்டை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT