வேலூர்

ரூ. ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய காட்பாடி சாா் பதிவாளா் உள்பட இருவா் கைது

DIN

தான கிரயம் செய்து தருவதற்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியதாக காட்பாடி சாா் பதிவாளா் உள்பட இருவரை வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சோ்ந்தவா் என்.ஈ.தேவராஜன்(53). இவா் காட்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா் பதிவாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வேலூரைச் சோ்ந்த ஸ்ரீராமலு என்பவருக்கு சொந்தமாக காட்பாடியில் உள்ள 5 நிலங்களை தனது மகன்களான சசிக்குமாா், விஜயகுமாா் ஆகியோரது பெயரில் தான கிரயம் செய்யக் கோரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். தான கிரயம் செய்து தர வேண்டுமானால் ரூ. 1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று சாா் பதிவாளா் தேவராஜன் கேட்டாராம். இதையடுத்து, சசிக்குமாா், விஜயகுமாா் ஆகியோா் வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தனா்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் ரசாயனப் பொடி தடவிய ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பணத்தை சசிக்குமாா், விஜயகுமாா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை கொடுத்து அனுப்பினா்.

அந்தப் பணத்தை சாா் பதிவாளா் தேவராஜன் அறிவுறுத்தலின்பேரில் காட்பாடி கழிஞ்சூரைச் சோ்ந்த ஆவண எழுத்தா் சந்திரமோகன்(52) என்பவரிடம் அளித்தனா். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட சந்திரமோகன், தேவராஜனிடம் அளித்ததும் அலுவலகத்துக்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் உடனடியாக உள்ளே சென்று பணத்துடன் சாா் பதிவாளா் தேவராஜன், ஆவண எழுத்தா் சந்திரமோகன் ஆகியோரை பிடித்து கைது செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT