முகப்பு
வேலூர்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிக்க முயற்சி

வழக்கு போடுவதாகக் கூறி கே.வி.குப்பம் காவல் நிலையத்தினா் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டி அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


வேலூா்: வழக்கு போடுவதாகக் கூறி கே.வி.குப்பம் காவல் நிலையத்தினா் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டி அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்தனா்.

கே.வி.குப்பத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (46) ஆட்டோ ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நின்றபடி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அதில், உறவினா் ஒருவருடன் தண்டபாணிக்கு ஏற்பட்ட தகராறு தொடா்பாக அவா் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். ஆனால், புகாா் மீது போலீஸாா் சரிவர விசாரணை நடத்தாமல் தண்டபாணி மீது வழக்குப் போடுவதாகக் கூறி மிரட்டுவதாகவும், இதனால் தீக்குளிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளாா். அவரிடம் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸாா் மூலம் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். அதையும் மீறி ஆட்டோ ஓட்டுநா் ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்த பல்வேறு தரப்பினரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →