FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 17 மார்ச் 2026, 6:45 pm IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி - பிடிஐ
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறவிருக்கும் இம்மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளில் இது போன்ற உயர்நிலை மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட 13 மாவட்டங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

குறிப்பாக ஹெளரா, பாரக்பூர், சாந்தன்நகர் மற்றும் அன்சோல் - துர்காபூர் நகர ஆணையர்கள், 12 காவல் துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

summary

19 IPS officers changed by EC in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments