முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 1:15 PM
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறவிருக்கும் இம்மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளில் இது போன்ற உயர்நிலை மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட 13 மாவட்டங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஹெளரா, பாரக்பூர், சாந்தன்நகர் மற்றும் அன்சோல் - துர்காபூர் நகர ஆணையர்கள், 12 காவல் துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

summary

19 IPS officers changed by EC in West Bengal

முழு கட்டுரையைப் படிக்க →