ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன், ஐபிஎஸ் அதிகாரிகளின் நியமனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் நிர்வாக ஏடிஜிபி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
summary