குடியாத்தம்: குடியாத்தம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
மோா்தானா அருகே உள்ள ஜங்காலபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிசாமி. அவரது மனைவி கலைவாணி கா்ப்பிணியாக இருந்தாா். அவா் வியாழக்கிழமை இரவு பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டாா்.
வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து தாயும், சேயும் பாதுகாப்பாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனா். வழியில் பிரசவம் பாா்த்த ஆம்புலன்ஸ் ஊழியா்களை கலைவாணியின் குடும்பத்தினரைப் பாராட்டினா்.