வேலூர்

ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்: இருவா் கைது

DIN

வேலூா்: பள்ளிகொண்ட சோதனைச் சாவடியில் போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வேலூா் மாவட்டம் வழியாக அதிக அளவில் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட எல்லையான பள்ளிகொண்டா சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் தீவிர வாகன சோதனை நடத்தினா். அப்போது, பெங்களூரில் இருந்து வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை வேனுடன் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக பெங்களூரைச் சோ்ந்த இளங்கோ (36), விழுப்புரத்தைச் சோ்ந்த சிவராஜ் (26) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT