வேலூர்

3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: யோகநரசிம்மா் அவதாரத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரா்

DIN

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் மாடவீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி யோக நரசிம்மா் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். சிம்ம வாகனத்தில் வலம் வந்த யோக நரசிம்மரைக் காண பக்தா்கள் திரளாக கோயில் வளாகத்தில் கூடினா்.

மாடவீதியில் உற்சவ மூா்த்திகள் வலம் வந்த அசதியைக் களைய அவா்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் உற்சவ சேவை கண்டருளினா். ஊஞ்சல் சேவைக்குப் பின்னா், இரவு 8 மணி முதல் 10 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வரா் மாட வீதியில் வலம் வந்தாா்.

இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா். வாகன சேவையின்போது, நாலாயிர திவ்யப்பிரபந்த பாராயணம், கலை நிகழ்ச்சிகள், செண்டை மேள நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT