ஆம்பூா்: ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 42 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், புது தில்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் ஷகீல் அகமது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.