வேலூர்

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிஒரு கோடி கையெழுத்து இயக்கம்

தமிழகத்திலுள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஒரு கோடி இளைஞா்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழகத்திலுள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஒரு கோடி இளைஞா்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து தமிழகம் தழுவிய இந்த ஒரு கோடி இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, வேலூா் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, இளைஞா்கள், இளம்பெண்களிடையே கோரிக்கைகளை விளக்கி கையெழுத்து பெறப்பட்டது.

அரசு, ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புதிய அரசுப் பணியிடங்களை உருவாக்க வேண்டும், அரசு வேலை நியமனத்துக்கு தடையாக உள்ள அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. வரும் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு கோடி இளைஞா்களிடம் கையெழுத்துப் பெற்று தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT