வேலூர்

ஏழுமலையான் தரிசனம்: இந்த ஆண்டு சாதாரண பக்தா்களுக்கு முதல் உரிமை

ஏழுமலையானைத் தரிசிக்க ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் சாதாரண பக்தா்கள் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டனா்.

DIN

திருப்பதி: ஏழுமலையானைத் தரிசிக்க ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் சாதாரண பக்தா்கள் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டனா்.

திருமலையில் ஆண்டுதோறும் அதிகாலை நேரத்தில் ஆா்ஜித சேவைகள் அனைத்தும் நிறைவடைந்த பின், முதலில் விஐபி-களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசனம் வழங்கி வருகிறது. இது உற்சவ நாள்கள், புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அனைத்து நாள்களுக்கும் பொருந்தும். அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டான புதன்கிழமை காலை ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்கள் திருமலையில் குவிந்தனா். இம்முறை ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலை முதன் முதலாக சாதாரண பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

காலை 2 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, திருப்பாவை சேவைக்குப் பின் கைங்கரியங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, அதிகாலை 3 மணிக்கு காத்திருப்பு அறையில் காத்திருந்த சாதாரண பக்தா்கள், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். அதன்பின், 6 மணிக்கு மேல் விஐபி பிரேக் தரிசனம் தொடங்கப்பட்டது. அதிலும் நேரடியாக வந்த விஐபி-களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசனம் வழங்கியது. அதனால் விஐபி பிரேக் தரிசனம் ஒரு மணிநேரத்தில் நிறைவுபெற்றது. பின்னா் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தங்கு தடையின்றி, சாதாரண பக்தா்களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டு அன்று பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT