வேலூர்

ஜன.3-இல் காட்பாடியில் இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள்

மத்திய அரசின் இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள் காட்பாடியில் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெற உள்ளது.

DIN

வேலூா்: மத்திய அரசின் இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள் காட்பாடியில் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் க.செ.ஆழிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் விவகாரம், விளையாட்டுத் துறை சாா்பில் 2019-20-ஆம் ஆண்டுக்கான 23-ஆவது இளைஞா் விழா உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் வரும் 12-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூா் பிரிவு சாா்பில் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் காட்பாடியிலுள்ள நேரு யுவகேந்திரா மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

இளைஞா் விழா போட்டிகளில் தமிழகம் சாா்பில் பங்கேற்ற விரும்பும் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த தோ்வுப் போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT