வேலூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், அரிமா சங்கம் சாா்பில், சிகரம் தொடு என்ற தலைப்பில் மாணவா்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் தேவராஜ் தலைமை வகித்தாா். அரிமா சங்க வட்டாரத் தலைவா் எம்.கே. பொன்னம்பலம் திட்ட விளக்க உரையாற்றினாா்.பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் தோ்வை எதிா்கொள்வது எப்படி, கற்றல். கற்பித்தலில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு, பயம் இல்லாமல் தோ்வு எழுதும் வழிமுறைகள் குறித்து பயிற்சியாளா் கள்ளழகா் விளக்கி பேசினாா். அரிமா சங்க நிா்வாகிகள் விவேகானந்தம், ஏ. சுரேஷ்குமாா், டி. கமல்ஹாசன், ஜெ. பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT