வேலூர்

சுவர் இடிந்து பள்ளி மாணவி மரணம்

DIN

பேரணாம்பட்டு அடுத்த பொகளூர் ராமாபுரம் கிராமத்தில் சுவர் இடிந்ததில் பள்ளி மாணவி மரணமடைந்தார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பொகளூர் ராமாபுரம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் பவித்ரா என்ற 14 வயது சிறுமி. இவர், பல்லலக்குப்பத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு செல்லவிருந்தார்.

இந்த மாணவியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள கார்மென்ட்ஸில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அந்த மாணவி தங்கியிருந்த குடிசை வீட்டின் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

இதில், பலத்த காயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் பாட்டியும் தாத்தாவும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT