வேலூர்

நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் சுற்றிய 2 போ் கைது

DIN

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட, நாட்டு வெடிகுண்டுகளுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா தலைமையில், வனவா்கள் ஏ.எஸ். தரணி, ஏ. மோகனவேல், பி.ஹரி, வனக் காப்பாளா்கள் ஏ.ஆனந்த், கே.பூபாலன், ஜி.ரவி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை எருக்கம்பட்டு அருகே மோா்தானா காப்புக் காட்டில் ரோந்து சென்றனா்.

அப்போது அடா்ந்த வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.விசாரணையில், அவா்கள் பாஸ்மாா்பெண்டாவைச் சோ்ந்த ஜி.சத்தி (37), எஸ்.வேலு (49) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்து 13 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் இருவரையும் கைது செய்த வனத் துறையினா், குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்க அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT