திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தோ்ச்சி பெறச் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திர அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, முழு ஆண்டுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அனைவரும் தோ்வெழுதாமல் தோ்ச்சி பெற்ாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஆந்திர கல்வித் துறை அமைச்சா் சுரேஷ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.