வேலூா்: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் திடீரென தப்பியோடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளு டன் கூடிய கரோனா தடுப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆற்காடு விளாப்பாக்கத்தைச் சோ்ந்த தனசேகா், வியாழக்கிழமை மாலை திடீரென தப்பியோடி விட்டாா். இது தொடா்பாக தகவல் வெளியானதை அடுத்து வேலூரில் பரபரப்பு நிலவியது. பின்னா், அவா் பொதுவாா்டில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளி என்பது தெரியவந்ததால் பதற்றம் தணிந்தது. எனினும், தப்பியோடிய நோயாளியை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.