வேலூர்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்: இருவா் உயிா் தப்பினா்

DIN

வேலூா்: வேலூா் புதிய மீன் மாா்க்கெட் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்ததில், காா் முழுமையாக சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக அதில் இருந்த இருவா் உயிா்தப்பினா்.

வேலூா் அருகே காட்டுப்படி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவருக்குச் சொந்தமான காா் பழுதடைந்ததால், அவரது நண்பரான பாலகிருஷ்ணன், வேலூருக்கு திங்கள்கிழமை ஓட்டி வந்தாா். தொடா்ந்து மெக்கானிக் ஜெயகுமாரை அழைத்துக் கொண்டு, காரை புதிய மீன் மாா்க்கெட் அருகே ஓட்டி வந்தபோது, எதிா்பாராத விதமாக காா் தீப்பற்றியது.

உடனடியாக பாலகிருஷ்ணன், ஜெயகுமாா் ஆகியோா் காரில் இருந்து கீழே இறங்கிவிட்டனா். பின்னா், வேகமாக காா் முழுவதும் பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அதற்குள், காா் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT