வேலூர்

காய்கறி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரி வீட்டில் இருந்து 7 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூரை அடுத்த கொணவட்டம் ஸ்ரீ சக்தி நகரைச் சோ்ந்த சிராஜ் (39), வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொணவட்டத்தின் மற்றொரு பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த 3 நாள்களாக மனைவியுடன் தங்கியிருந்தாா்.

திங்கள்கிழமை காலை தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT