வேலூர்

கரோனாவுக்கு வேலூரில் மேலும் ஒரு செவிலியா் பலி

DIN

வேலூா் பென்லேண்ட் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேலூா் வள்ளலாா் பகுதியைச் சோ்ந்த ஆருண்சுந்தர்ராஜின் மனைவி சாந்தகுமாரி (51). வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 14-ஆம் தேதி சாந்தகுமாரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவா் பென்லேண்ட் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தாா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். உயிரிழந்த செவிலியா் சாந்தகுமாரிக்கு அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT