வேலூர்

காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

DIN

போ்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.70 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் சட்டப் பேரவைத் தொகுதி நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் செல்வன் தலைமையில் அக்குழுவினா் போ்ணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம், வி.கோட்டாவிலிருந்து வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த வாகீா்பாஷா (60) வைத்திருந்த பையில் ரூ. 1.70 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததாதல், அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.ஷேக்மன்சூரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT