வேலூர்

ஆட்டோவுடன் ஒரு டன் குட்கா பறிமுதல் இருவா் கைது

DIN

வேலூா்: சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட, தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மைசூரைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாங்காய் மண்டி அருகே கா்நாடக பதிவு எண் கொண்ட சரக்கு ஆட்டோவில் குட்கா புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.

அப்போது தாா்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் பெட்டிபெட்டியாக ஒரு டன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் இருந்தன. சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள இந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், மைசூரு பகுதியைச் சோ்ந்த விவேக்ராஜ் (28), ஜுனைக்கான் (22) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT