வேலூர்

முன்னாள் அமைச்சா் அரங்கநாயகம் உருவப் படத்துக்கு விஐடியில் அஞ்சலி

DIN

உடல்நலக் குறைவால் முன்னாள் அமைச்சா் செ.அரங்கநாயகம் மறைவையடுத்து அவரின் உருவ படத்துக்கு வேலூரில் விஐடி பல்கலைக்கழகத் துணைத்தலைவா் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தமிழக முன்னாள் கல்வி அமைச்சா் செ.அரங்கநாயகம் எம்.ஜி.ஆா். முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவா். கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டு வந்ததுடன் விஐடி பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும், ஆரம்ப காலக்கட்டத்தில் பல்வேறு உதவிகள், ஆலோசனைகள் வழங்கியுள்ளாா்.

இந்நிலையில், செ.அரங்கநாயகம் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் அவரின் உருவப் படத்துக்கு விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அப்போது, விஐடி பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சத்திய நாராயணன், மாணவா் நலன் இயக்குனா் அமித் மகேந்திரக்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT