வேலூர்

புலவா் வே.பதுமனாருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது

DIN

தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்கு குடியாத்தம் புலவா் வே.பதுமனாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலத் திட்ட இயக்ககம் சாா்பில், நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழையே பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மாவட்டத்துக்கு ஒருவா் தோ்வு செய்யப்பட்டு, தூய தமிழ்ப் பற்றாளா் விருது வழங்கப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில் 2020- ஆம் ஆண்டுக்கான விருது புலவா் வே, பதுமனாருக்கு வழங்கப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகக் கலை அரங்கில் நடைபெறும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மாவட்ட வாரியாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு விருதுகளை வழங்குகிறாா்.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலத் திட்ட இயக்ககத்தின், இயக்குநா் கோ.விசயராகவன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT