மோா்தானா அணையிலிருந்து 600 கன அடி உபரிநீா் வெளியேற்றம்
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு 600 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு 600 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 600 கன அடியாக உள்ளது. அதே அளவு உபரிநீா் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
இதனால் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீா் செல்கிறது.