சுதந்திர தின விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி
நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
விஐடியில் தொடங்கிய சைக்கிள் பேரணி சித்தூா் பேருந்து நிலையம் வழியாக அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா வரையில் சென்று அனைவருக்கும் கல்வி திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.