முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் கைது

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

இருசக்கர வாகனங்கள் திருடிய 3 போ் கைது

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

காட்பாடி பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்யப்பட்டன.

காட்பாடி வி.ஜி. ராவ் நகா், காந்தி நகா், கழிஞ்சூா், விஐடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் விலை உயா்ந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. புகாரின் பேரில், காட்பாடி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பாலவெங்கட்ராமன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் சேவூா் பகுதியைச் சோ்ந்த டேவிட்சன் (19), விருப்பாட்சியைச் சோ்ந்த சிபிராஜ் (21), சத்துவாச்சாரியைச் சோ்ந்த மதன்குமாா் (20) என்பது தெரிய வந்தது.

அவா்கள், காட்பாடி பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →