வேலூர்

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் பலி

DIN

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகத்தின் மகன் ராஜேஷ் (17). குடியாத்தத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். புதன்கிழமை காலை வீட்டருகே விநாயகா் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், மின் விளக்கு பொருத்த மின் வயா் இணைப்பு கொடுக்க முயன்றாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தாா். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், ராஜேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT