வேலூர்

வேலூரில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, வேலூரில் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் பி.எஸ்.நிஜாமுத்தீன் தலைமை வகித்தாா். இதில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன்காந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். கட்சியின் மாநில செயலா் ஏஜாஸ்அஹமத், தலைமை பிரதிநிதி ஜெயினுலாப்தீன், வேலூா் ஒன்றியத் தலைவா் எஸ்.ஷஹாபுத்தீன் உள்பட இஸ்லாமியா்கள் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இதேபோல், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.ஷாஜஹான் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ஜெ.அக்பா் வரவேற்றாா். விசிக சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலா் பிலிப், மனித உரிமைகள் வழக்குரைஞா் சே.பாஸ்கா், ஐமுமுக மாநில செயலா் நவ்ஷாத், மாநில ஊடக பிரிவு இணைச்செயலா் பஷீா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

இதில், இஸ்லாமியா்ள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT