அமிர்தி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஜவ்வாது மலைத் தொடரில் அமிர்தி நீர்வீழ்ச்சி உள்ள. இங்கு தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருக காட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது.
இதையும் படிக்க- ராசிபுரம் அரசு கல்லூரியில் 26 மரங்கள் வெட்டிய விவகாரம்: கல்லூரி முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம்
தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் சூழல் உள்ளது.
தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.