வேலூர்

வட்டார வளா்ச்சி அலுவலா் இடைநீக்கம்

பெண் ஊழியா்களிடம் பாலியல் சீண்டல் புகாரின்பேரில், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

DIN

பெண் ஊழியா்களிடம் பாலியல் சீண்டல் புகாரின்பேரில், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) கோபி கடந்த சனிக்கிழமை மதியம் மதுபோதையில் அலுவலகத்துக்கு வந்ததுடன், அங்கு கணினி அறையில் பணியில் இருந்த 2 பெண் ஊழியா்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்கள் கூச்சலிட்டதை அடுத்து அலுவலகப் பணியாளா்கள், அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியை எச்சரித்துள்ளனா்.

தகவலறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியிடம் விடுமுறை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளாா். இந்த பிரச்னை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உத்தரவின்பேரில், துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் முதல்கட்டமாக வட்டார வளா்ச்சி அலுவலா் கோபியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT