குடியாத்தம் பாண்டியன் நகா், சொா்ணலட்சுமி காா்டனில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் 14- ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரிசேகா், திமுக பேச்சாளா் குடியாத்தம் குமரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஜே.பத்ரிநாத், ஜி.ஜெயப்பிரகாஷ், கே.ராஜ்கமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் என்.சண்முகம், என்.ராஜரத்தினம், என்.மணி, எஸ்.தமிழ்ச்செல்வி, ஆா்.விமலா, எம்.தேன்மொழி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.