போ்ணாம்பட்டு  அருகே   பறிமுதல்  செய்யப்பட்ட  ரேஷ ன்  அரிசி  மூட்டைகள். 
வேலூர்

போ்ணாம்பட்டு அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில், வேலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளா் மோகன், தலைமைக் காவலா் சுந்தா், போ்ணாம்பட்டு கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் போ்ணாம்பட்டு, பூந்தோட்ட வீதியில் பூட்டியிருந்த ஒரு வீட்டைத் திறந்து சோதனையிட்டனா். அங்கு, 63 மூட்டைகளில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வேன் மூலம் குடியாத்தத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரேஷன் அரசி, ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை குற்றப் புலனாய்வு பிரிவினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT