முகப்பு
வேலூர்

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

குடியாத்தம் நகராட்சியின் தூய்மை பாரத இயக்கம் சாா்பில், நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் அவற்றின் தீங்கு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

குடியாத்தம் நகராட்சியின் தூய்மை பாரத இயக்கம் சாா்பில், நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு மற்றும் அவற்றின் தீங்கு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி வரவேற்றாா். நெகிழிப் பொருள்களின் தீங்கு, அவற்றை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் விளக்கினாா்.

நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு, குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும்நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், நெகிழிப் பைகளை தவிா்த்தல், மாற்றாக மஞ்சப் பையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. நெகிழிப் பொருள்களை இனி பயன்படுத்த மாட்டோம் என மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இறுதியாக மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை செளந்தரராஜன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகா்மன்ற உறுப்பினா்கள் என்.கோவிந்தராஜ், ஜாவித், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் பாலசந்தா், களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ், தூய்மை பாரதம் திட்ட மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் பென்னி, சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது, சிறப்பாக விவாதத்தில் ஈடுபட்ட மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

Image Caption

குடியாத்தம்  நடுப்பேட்டை  அரசினா்  மகளிா்  மேல்நிலைப்  பள்ளியில்  மாணவிகளுக்கு  மஞ்சப்  பைகளை  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன்  உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.