முகப்பு
வேலூர்

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

ஊசூா் அருகே விவசாயக் கிணற்றில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

ஊசூா் அருகே விவசாயக் கிணற்றில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.

அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூா் கிராமம் உடையாா்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக வருவாய்த் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் சங்கா்தயாளன், அரியூா் போலீஸாா், வேலூா் தீயணைப்புத் துறையினா் சென்று கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எந்த ஊரைச்சோ்ந்தவா், அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →