ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது...
டி20 உலக்க கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் அந்த விருதினை பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு சமர்ப்பித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக வான்கடேவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்திய அணி முதலில் பேட்டி செய்து, 20 ஓவர்களில் 253/7 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் 246/7 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதுவென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது:
எல்லாப் புகழும் பும்ராவுக்கே. உலகத் தரமான பந்துவீச்சாளர். தலைமுறைக்கு ஒருமுறைதான் அவரைப் போல ஒரு வீரர் கிடைப்பார்கள். அதைத்தான் அவர் இன்று செய்துகாட்டினார். இந்த விருதும் அவருக்குத்தான் செல்ல வேண்டும்.
இறுதிக் கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் இப்படி பந்துவீசவில்லை எனில் நான் இங்கு நின்றிருக்க மாட்டேன்.
கடினமான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்கள் தங்களை நம்பி பந்துவீசினார்கள். அவர்களுக்குத்தான் அனைத்து பாராட்டுகளும் செல்ல வேண்டும்.
கடந்த போட்டியில் இருந்து சிறிது ஃபார்ம் எனக்குக் கிடைத்துள்ளது. எனக்கு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, அந்த ஃபார்மை பயன்படுத்த வேண்டுமென நினைத்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்கள் குவிக்க வேண்டும்.
எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த நினைத்தேன். 250 ரன்களும் இங்கு சேஸ் செய்யமுடியும். இங்கிலாந்து மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.
இது ஒரு நாள் போட்டியோ டெஸ்ட் போட்டியோ அல்ல; எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டியதில்லை. இந்தியாவுக்காக பங்களிப்பதில் மகிழ்ச்சி என்றார்.