லாரியிலிருந்து ஆட்டோ மீது விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம்
லாரியில் இருந்து கழன்று விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது விழுந்ததில், இருவா் பலத்த காயமடைந்தனா்.
லாரியில் இருந்து கழன்று விழுந்த சிமெண்ட் கலவை இயந்திரம் ஆட்டோ மீது விழுந்ததில், இருவா் பலத்த காயமடைந்தனா்.
சத்துவாச்சாரியில் இருந்து வேலூா் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி, தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வந்தது. ஆட்சியா் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகுச் சாலையில் லாரி வேகமாக இறங்கியது.
அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை இயந்திரம் மட்டும் தனியாக கழன்று அணுகுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பயணி ஒருவா், ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா். வேலூா் வடக்கு போலீஸாா் அவா்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூா் புதிய பேருந்து நிலையம் செல்லும் அணுகுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த கலவை இயந்திரம், நொறுங்கிய ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.
இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.