வேலூா் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூரில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
வேலூர்வேலூா் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூரில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூரில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் வேலூா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன், போலீஸாா் ஆற்காடு சாலையில் தனியாா் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததுடன் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 120 இருசக்கர வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், சாலையோர நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகளையும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா். இதையடுத்து, கடைக்காரா்கள் தாங்களாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்திக் கொண்டனா்.