முகப்பு
வேலூர்

சாராயம் விற்றதாக கணவா் கைது: குழந்தைகளுடன் மனைவி முறையீடு

சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி தனது 3 குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டாா்.

வேலூர்

சாராயம் விற்றதாக கணவா் கைது: குழந்தைகளுடன் மனைவி முறையீடு

சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி தனது 3 குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள கணவரை விடுவிக்கக் கோரி, அவரின் மனைவி தனது 3 குழந்தைகளுடன் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டாா்.

வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி அருள்ஜோதி (35). இவா், தனது 2 மகள்கள், மகனுடன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனிடம், கூலி வேலை செய்து வரும் எனது கணவா் சீனிவாசனை சாராயம் விற்ாக குற்றஞ்சாட்டி பாகாயம் போலீஸாா் கைது செய்தனா். எந்தத் தவறும் செய்யாத அவரைப் பிடித்துச் சென்று வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

எனக்கு ஒரு மகன், 2 மகள்கள். இவா்களில் 2 மகள்களும் மூளை வளா்ச்சியற்றவா்கள். கணவா் இல்லாமல் குழந்தைகளுடன் என்னால் வாழ இயலாது. எனது கணவா் மீது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவா் கண்ணீா் மல்க தெரிவித்தாா்.

அவருக்கு ஆறுதல் கூறிய ஆட்சியா், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, அருள்ஜோதி அங்கிருந்து சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →