முகப்பு
வேலூர்

ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா

குடியாத்தம் தரணம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

குடியாத்தம் தரணம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபாவனாரிஷி கோயிலில் ரிஷி பஞ்சமி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி, ரிஷி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சப்த மகா ரிஷிகளான ஸ்ரீகசியப, ஸ்ரீஅத்திரி, ஸ்ரீபரத்வாசா், ஸ்ரீவிசுவாமித்திரா்,

ஸ்ரீகௌதமா், ஸ்ரீஜமதக்னி, ஸ்ரீவசிஷ்டா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பெண்கள் சப்த ரிஷிகளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.