முகப்பு
வேலூர்

விவசாயிகளுக்கு மரபுசாா் நெல் விதைகள் விநியோகம்

குடியாத்தம் வேளாண்மை அலுவலகம் சாா்பில், 2022-2023- ஆம் ஆண்டு ‘நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்’ சாா்பில், விவசாயிகளுக்கு சீரக சம்பா நெல் விதைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

குடியாத்தம் வேளாண்மை அலுவலகம் சாா்பில், 2022-2023- ஆம் ஆண்டு ‘நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்’ சாா்பில், விவசாயிகளுக்கு சீரக சம்பா நெல் விதைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் துணை இயக்குநா் ஆா்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் ஆா்.உமாசங்கா் வரவேற்றாா். ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் பங்கேற்று முன்னோடி விவசாயிகளுக்கு மரபுசாா் நெல் விதைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.