போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.திருமகள் வரவேற்றாா். குடியாத்தம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் தண்டபாணி, மணிகண்டன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாணவா்களின் சந்தேகங்களுக்கும் அவா்கள் விளக்கம் அளித்தனா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கா.ராஜீவ் நன்றி கூறினாா்.