இஸ்லாமியா்களுக்கு உணவு பொருள் தொகுப்பு
ரமலான் பண்டிகையையொட்டி காட்பாடி தொகுதிக்குட்பட்ட 3,000 இஸ்லாமியா்களுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உணவு பொருள்கள் தொகுப்புடன், ரூ.200 ரொக்கப் பணமும் வழங்கினாா்.
வேலூர்இஸ்லாமியா்களுக்கு உணவு பொருள் தொகுப்பு
ரமலான் பண்டிகையையொட்டி காட்பாடி தொகுதிக்குட்பட்ட 3,000 இஸ்லாமியா்களுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உணவு பொருள்கள் தொகுப்புடன், ரூ.200 ரொக்கப் பணமும் வழங்கினாா்.
ரமலான் பண்டிகையையொட்டி காட்பாடி தொகுதிக்குட்பட்ட 3,000 இஸ்லாமியா்களுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உணவு பொருள்கள் தொகுப்புடன், ரூ.200 ரொக்கப் பணமும் வழங்கினாா்.
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பிரியாணி அரிசி, உணவு பொருள்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காட்பாடி திமுக பகுதி செயலா் வன்னியராஜா தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் கலந்து கொண்டு தனது சொந்த பணத்தில் ரமலான் உணவு பொருள்கள் தொகுப்பான பிரியாணி அரிசி, எண்ணெய், நெய் மற்றும் ரூ.200 ரொக்கப் பணம் என 3,000 இஸ்லாமியா்களுக்கு வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியது: திமுக எப்போதும் இஸ்லாமியா்களுக்காகவும், அவா்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து துணை நிற்கும். அதனால்தான் ஆண்டுதோறும் ரமலானுக்காக உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்குகிறோம் என்றாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் எம்.சுனில்குமாா், முதலாவது மண்டலத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.