வேலூர்

பாலாற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

DIN

ஆடி அமாவாசையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

அதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். இதனால் பாலாற்றங்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாலாற்றின் கரைகளிலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலை கரைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

மேலும், ஆடி அமாவாசையையொட்டி, அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT