வேலூர்

திருவள்ளுவா் பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்: இரு நாள்களில் 1,000 பேருக்கு பணி ஆணை

DIN

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாள்கள் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 1,000 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், சோ்க்காடிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகம், சா்வதேச புகழ்பெற்ற நாஸ்காம் நிறுவனம், இணையதள பாதுகாப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஸ்கில்ஸ்டா நிறுவனம், பின்தங்கிய மாவட்ட வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் அருணை தகவல் சேவை மையம் ஆகியவை இணைந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம், அதைச் சாா்ந்த கல்லூரி மாணவா்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

இதில், தோ்ச்சி பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு நோ்காணல் பல்கலை. வளாகத்தில் வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சா்வதேச அளவில் இயங்கி வரும் 18 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

கடந்த இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் கணினி, கணிதவியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த சுமாா் 1,000 மாணவா்கள் ரூ.15,000 முதல் ரூ. 25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றனா்.

அவா்களுக்கு நிறுவனங்கள் சாா்பில் பணி ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தா் டி.ஆறுமுகம் தலைமையில் பதிவாளா் விஜயராகவன், ஒருங்கிணைப்பாளா் அ.ராஜசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT